October 2, 2012

தம்பிக்கலை அய்யன் சித்தர் பாகம்-2


சஞ்சீவினி மூலிகை மொத்தம் 21 உள்ளது .அதில் இங்கு உள்ளதுஅமிர்த சஞ்சீவினி மூலிகை இது தம்பிக்கலை அய்யன் தவத்தால் இங்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது

அமிர்த சஞ்சீவினி இருப்பிடம்


தம்பிக்கலை அய்யனின் வடமேற்க்கு மூலையில் விநாயகர் கோவில் உள்ளது அதன் பக்கமாக மூலிகை வனம் ஒன்று உள்ளது இந்த வனத்தில் தான் அமிர்த சஞ்சீவினி மூலிகை உள்ளது இது சற்றே ஆகாய தாமரையும் ரோஜா மலரும் போன்றே பச்சை கலரில் இருக்கும்.

அமிர்த சஞ்சீவினி பெருமை


இதன் அருமை பற்றி இங்கு கூறியே ஆக வேண்டும் ரமாயணத்தில் லக்‌ஷ்மனுக்கு அடிபட்டபோது அனுமன் சஞ்சீவி மூலிகை எடுக்க சென்றார் அல்லவா? அதில் ஒன்றுதான் இது. அவருக்கு மிர்திவ சஞ்சீவினி,அமிர்த சஞ்சீவினி என்ற இரு மூலிகை தேவைபட்டது. ஒன்று காயத்தை சரி செய்ய மிர்த்திவ சஞ்சீவினி,மூக்கில் நசியமிட அமிர்த சஞ்சீவினி. அந்த மூலிகை தான் இது. பாம்பு கடித்தவரை இங்கு படுக்கவைக்கும் போது அமிர்த சஞ்சீவினி  காற்று உள்ளே செல்கிறது இது தான் காரணம் மேலும் பக்தியும் மிக அவசியம்

அய்யன் இருப்பிடம்

  தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் ஈரோடுமாவட்டம்(erode district) பெருந்துறை வட்டத்தில்அமைந்துள்ள இராகு கேது பரிகார ஸ்தலமாகும். ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 19 வது கி.மீட்டரில் ரெட்டை வாய்க்கால் உள்ளது.அங்கிருந்து 2 கி.மீட்டர் தெற்கு நோக்கி உள்ளது.சித்தோட்டில் இருந்து 10கி.மீட்டர் கவுந்தப்பாடியில் இருந்து 6 கி.மீட்டர் தொலைவில் தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் சித்தர் பீடமாக அமைந்துள்ளது


No comments: