June 8, 2013

பஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -2)

பட்சிகளின் SUPER STAR என்றால் அது காகம் தான். ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது (காலத்தில்).பட்சிகளின் POWER STAR என்றால் அது மயில் வலிமை குறைந்தது.


பஞ்சபட்சி பற்றி சித்தர்களில் போகர், அகத்தியர், இராமதேவர், உரோமரிஷி, போன்றோர் நூல்கள் எழுதியுள்ளனர்.அவற்றில் அதிகம் பின்பற்றுவது அகத்தியர்,போகர் நூல்களையே.


அகத்தியர்,உரோமரிஷி நூல்கள் மின்நூல்களாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பட்சி உண்டு அவை பின்வருமாறு

வல்லூறு

அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்               

ஆந்தை

திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்                   

காகம்

உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்                                

கோழி

அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்                              

மயில்

திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி   

படுபட்சி நாட்கள்:

   படுபட்சி என்பது அவருடைய பட்சி செயலிழந்து விடும் . இந்நாட்களில் எந்தவித சுபகாரியமும், பிரயாணமும், புதிய முயற்சிகளும் செய்யக்கூடாது .

வல்லூறு – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் - வியாழன் , சனி

தேய்பிறையில்  - செவ்வாய்

ஆந்தை– படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் – ஞாயிறு,வெள்ளி

தேய்பிறையில் – திங்கள்

காகம் – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் – திங்கள்

தேய்பிறையில் – ஞாயிறு

கோழி – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் -  செவ்வாய்

தேய்பிறையில்  -  வியாழன்,சனி

மயில் – படுபட்சி நாட்கள்

வளர்பிறையில் - புதன்

தேய்பிறையில் – புதன்,வெள்ளி


பட்சியின் நட்சத்திற்க்குரியோர் உரிய காலத்தை அறிந்து செயலை துவங்க வேண்டும்.பட்சிக்குரிய செயல்கள் ஐந்து அவை 

அரசு,ஊண்,நடை,துயில்,சாவு

அரசு,ஊண் போன்ற நேரங்களில் செயல் செய்ய அது வெற்றி பெறும்

எந்தெந்த காலங்களில் என்ன செயல் நடக்கும் என்பதை கீழ்காணும் நூலின் வாயிலாக அறியலாம் இது சித்தன்.காம் என்ற வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. நூலை பகிர்ந்த அய்யா ஞானவெட்டியான்அவர்களுக்கு நன்றி
                                                                                                                www.siththan.com
அய்யா ஞானவெட்டியான்



உரோமரிஷி பஞ்சபட்சி சாஸ்திரம்


அகத்தியர் பஞ்ச பட்சி சாஸ்திரம்


நூலின் பெயரை கிளிக் செய்து நூலை பதிவறக்கம் செய்யலாம்









June 7, 2013

பஞ்ச பட்சி சாஸ்திரம் (பாகம் -1)

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது முருக பெருமானிடமிருந்து அகத்தியருக்கு உபதேசிக்கப்பட்டது. பின் அனைத்து சித்தர் பெருமக்களும் அறிந்தனர். அக்கலை ஒரு உயரிய கலையாகும். அது பன்னிரெண்டு வருடம் சீடனாக இருந்தால் மட்டுமே கற்றுதருவார்கள். 

சித்தர்கலைகளில் வர்மகலை(மருத்துவம்), சரகலை, ஜோதிடம், பஞ்சபட்சி சாஸ்திரம் ஆகியவை மிகவும் இரகசியமாக கற்று தரப்பட்டன. இவை அனைத்தும் ஆளையே காலி செய்துவிடும் கலைகள். இந்த பஞ்சபட்சிகலையின் நன்மை கருதி சில தகவல்களை தருகிறேன்.

ஆந்தை
காகம்




கோழி



வல்லூறு(கழுகு)

மயில்














பஞ்ச பட்சிகள்:

வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என்ற ஐந்து பட்சிகள் சேர்ந்தது தான் பஞ்ச பட்சி ஆகும்.

பஞ்ச பட்சி என்பது அந்தந்த பட்சிக்கு ஏற்ற காலத்தில் தொழில் செய்தால் அது சிறப்பாக முடியும் . இதை மனதில் வைத்து தான் இக்கலை கற்றுத்தர மறுக்கப்பட்டது. இதன் முன்பு எதுவும் செல்லாது அந்த அளவுக்கு வலிமை வாய்ந்தது.

ராமாயணத்திலும்,கந்தபுராணத்திலும் போரில் இன்று போய் நாளை வா என்பார்கள். கதை படி அது பெருந்தன்மையாக இருக்கலாம் ஆனால் அந்த ஜாமம் முடிந்தவுடன் பகைவரின் பட்சி அரசாலும் என்பதை முருகபிரானும்,ராமபிரானும் அறிந்திருந்தனர் . அதனால் தான் நாளை வா என்றனர். பட்சி சாஸ்திரம் அவ்வளவு பயங்கரமானது.

பொதுவாக பட்சியில் எழுத்துபட்சி,ராசிபட்சி,நட்சத்திர பட்சி ,மறைவு பட்சி,சூக்கும பட்சி என பிரிவுகள் உண்டு.

திருவள்ளுவர்

பஞ்சபட்சியின் திறமையை சரியாகவும் சூக்குமாகவும் கூறியவர்களில் திருவள்ளுவரும் ஒருவர். அவர் கூறிய காலம் அறிதல் அதிகாரம் ஒரு சான்று, அதில் முழுவதும் பஞ்சபட்சி மகத்துவம் அடங்கியிருக்கும்.
       
      "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
        கருதி  இடத்தாற் செயின்."        

இதன் விளக்கம் ஏற்ற காலத்தை அறிந்து,இடத்தோடு பொருந்தச் செய்வானாயின், அவன் உலகம் முழுவதையும் தானே ஆள கருதுவானால் அது முடியும்.


நாம் எழுமையாக தெரிந்து கொள்ள நட்சத்திர பட்சி ஒன்றே போதுமானது. அதை பற்றி அடுத்த பதிவில் சந்திப்போம்.